அம்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய் ஆ!ஆ! என்று எனக்கு அருளி
வெம்சிறைப்புள் உயர்த்தாற்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புஉண்டால் என்செயுமோ.
அழகிய சிறகுகளைக்கொண்ட நாரையே, மடப்பம் என்ற குணத்தையுடைய நாரையே, அருள் உள்ளம் கொண்ட நாரையே,
நீயும், உன்னுடைய இணையாகிய அழகிய சிறகுகளைக்கொண்ட ஆண் நாரையும் என்னைப் பாருங்கள், 'அடடா!' என்று என்மீது பரிதாபப்படுங்கள், எனக்காக எம்பெருமானிடம் தூது செல்லுங்கள்.
எம்பெருமான், எதிரிகளுக்குக் கொடுமை செய்கிற சிறகுகளைக்கொண்ட கருடனைக் கொடியாக உயர்த்தியவன், அவனிடம் சென்று எனக்காக நீங்கள் பேசுங்கள்,
அப்படிப் பேசும்போது, அவன் உங்கள் சொல்லைக் கேட்காமல் இருந்துவிடக்கூடும். 'கேளாமை' என்கிற வலிய சிறையில் உங்களை இடக்கூடும், அதனால் உங்களுக்கு என்ன துயரம் வந்துவிடும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.