விதியினால் பெடைமணக்கும் மென்நடைய அன்னங்காள்,
மதியினால் குறள்மாணாய் உலகுஇரந்த கள்வர்க்கு
மதிஇலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதிஎல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.
மென்மையான நடைகொண்ட அன்னங்களே, நல்வினையாலே பெண் அன்னங்களைச் சேர்ந்து வாழும் அன்னங்களே,
அறிவினாலே வாமனனாக அவதாரம் எடுத்து, மாவலியிடம் மூன்றடி மண் கேட்ட கள்வனிடம் எனக்காகச் செல்லமாட்டீர்களா! இங்கே ஒருத்தி அறிவெல்லாம் கலங்கிப்போய் 'புத்தியில்லாத என்னுடைய கொடிய வினைகள் தீராதா?' என்று ஏங்கி மயங்கிக்கிடக்கிறாள் என்று சொல்லமாட்டீர்களா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.