அவர்அவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவர்அவர் இறையவர்என அடிஅடைவர்கள்,
அவர்அவர் இறையவர் குறைவிலர், இறையவர்
அவர்அவர் விதிவழி அடையநின்றனரே.
இவ்வுலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவின் அடிப்படையில் வெவ்வேறு தெய்வங்களை நம்புகிறார்கள், அவர்களுடைய திருவடிகளைச் சென்றடைகிறார்கள்,
இப்படி மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் குறையற்றவர்கள்தாம், ஏனெனில், அவர்களுக்குள் எம்பெருமானாகிய திருமால் எழுந்தருளியிருக்கிறார், அவருடைய அரூளாலே இந்தத் தெய்வங்கள் தம்மை வணங்குவோருக்கு வேண்டியதைத் தருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.