நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7

நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகிய
Updated on
1 min read

திடம் விசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசை
படர்பொருள்முழுவதுமாயவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்து எங்கும்பரந்துஉளன்
சுடர்மிகு சுருதியுள், இவை உண்ட சுரனே.

திடமான வானம், நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களால் ஆன அனைத்துப் பொருள்களிலும், உடலுக்குள் உயிர்போல் எம்பெருமான் மறைந்து பரவியிருக்கிறான், ஒளிமிகுந்த வேதத்தில் தோன்றுகிறவனும் அவனே, இந்தப் பொருள்களால் ஆன உலகத்தை (முடிவுக்காலத்தில்) உண்டவனும் அவனே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com