

பாடல் - 7
அறிந்து அறிந்து, தேறித் தேறி, யான் எனது ஆவி உள்ளே
நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மலமாக வைத்து
பிறந்தும் செத்தும் நின்றும் இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்,
நறும்துழாயின் கண்ணி அம்மா, நான் உனைக் கண்டுகொண்டே.
நறுமணம் வீசும் துளசி மாலையை அணிந்த பெருமானே, நான் உன்னைக் கண்டுகொண்டேன், உன்னை அறிந்து, அறிந்து, தெளிவு பெற்றுத் தெளிவு பெற்று, நிறைந்த ஞானமூர்த்தியான உன்னை என்னுடைய உயிரினுள்ளே வைத்தேன், என் குற்றங்கள் நீங்கபெற்றேன், அதனால், திரும்பத் திரும்பப் பிறந்து, இறந்து, நின்று, தடுமாறுகிற பேதைமை ஒழிந்தது.
******
பாடல் - 8
கண்டுகொண்டு, என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
எண்திசையும் உள்ள பூக்கொண்டு ஏத்தி, உகந்து உகந்து
தொண்டரோங்கள் பாடி ஆடிட, சூழ்கடல் ஞாலத்துள்ளே
வண்துழாயின் கண்ணி வேந்தே, வந்திடகில்லாயே.
அழகிய துளசி மாலையை அணிந்த பெருமானே, உன்னை நான் கண்டுகொள்ள வேண்டும், எட்டுத் திசைகளிலிருந்தும் வந்த மலர்களை உன்னுடைய திருவடிகளிலே தூவி, ஆவல் தீர என் கைகள் வழிபட வேண்டும், உன்னைப் போற்ற வேண்டும், மனம் மகிழ வேண்டும், தொண்டர்களாகிய நாங்கள் பாடி ஆட வேண்டும், எம்பெருமானே, இப்படி நாங்கள் உன்னை வழிபடுவதற்காக, கடலால் சூழப்பட்ட இந்த உலகில் நீ எழுந்தருள்வாய்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.