நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

நறுமணம் கமழ்கிற
Updated on
1 min read

பாடல் - 11

ஆட்செய்து ஆழிப்பிரானைச் சேர்ந்தவன், வண்
                                                                                    குருகூர் நகரான்,
நாள்கமழ் மகிழ்மாலை மார்பினன், மாறன் சடகோபன்,
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும்
                                                                                   வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்று அது கையதுவே.

சக்ராயுதத்தை ஏந்திய பெருமானுக்குத் தொண்டுசெய்து அவருடைய தொண்டராய் ஆனவர், வளம் நிறைந்த திருக்குருகூரைச் சேர்ந்தவர், நறுமணம் கமழ்கிற மாலையை மார்பில் அணிந்தவர், மாறன் சடகோபன், அவர் இறைவன்மீது விருப்பம்கொண்டு ஆயிரம் பாடல்களைப் பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்கள் வைகுந்தத்தைச் சென்றடைவார்கள், அங்கிருந்து மீண்டு வந்து பிறக்கமாட்டார்கள், அந்த வரம் அவர்கள் கையில்தான் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com