

பாடல் - 11
வைத்த மாநிதியாம் மதுசூதனனையே
அலற்றிக்
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச்
சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்
திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன்
உலகு ஆள்வாரே.
சேர்த்துவைத்த சிறந்த நிதியைப்போன்றவன் மதுசூதனன், அத்தகைய பெருமானைப் பாராட்டி, கொத்தாக மலர்கள் மலர்கின்ற சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூரைப்பற்றியவை. இப்பாடல்களை மனத்தில் வைத்து உரைப்பவர்கள், திகழ்கின்ற பொன்னுலகான பரமபதத்தை ஆள்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.