

பாடல் - 11
தெரிதல், நினைதல், எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச்சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே.
யாராலும் உண்மையாக அறிய இயலாத, தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாத, நெஞ்சால் தியானித்து எண்ண இயலாத பெருமையையுடையவன் எம்பெருமான், அந்தத் திருமாலின் தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன். அந்தச் சடகோபன் உணர்ந்து சொன்ன ஆயிரம் பாடல்களிலே இந்தப் பத்தையும் பாடியவர்கள், உலகை உண்ட அந்தப் பெருமானின் தொண்டர்களாக ஆவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.