நெஞ்சமே, நல்லை நல்லை, உன்னைப்பெற்றால்
என்செய்யோம்? இனி என்ன குறைவுஇனம்?
மைந்தனை, மலராள் மணவாளனைத்
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய்.
நெஞ்சே, நீ மிகவும் நல்ல தன்மையோடு இருக்கிறாய், உன்னைத் துணையாகப் பெற்றபின் எனக்கு என்ன குறை? எதைத்தான் என்னால் சாதிக்கமுடியாது? எம்பெருமானை, அழகனை, திருமகளின் கணவனைத் தூங்கும்போதும் விடாமல் தொடர்ந்து சிந்திப்பாயாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.