நம்பியை, தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திருமூர்த்தியை,
உம்பர், வானவர் ஆதி, அம் சோதியை,
எம்பிரானை என்சொல்லி மறப்பனோ.
எம்பெருமான் ஆண்களில் சிறந்தவன், அழகிய தென்குறுங்குடியில் எழுந்தருளியிருப்பவன், செம்பொன்போலத் திகழும் திருமேனியைக் கொண்டவன், வானுலகைச் சேர்ந்த வானோரின் தலைவன், அவர்களின் செயல்களுக்கெல்லாம் காரணமானவன், அழகிய சோதி, எம்பிரான், அவனை நான் என்னசொல்லி மறப்பேன்? (ஒருபோதும் மறக்கமாட்டேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.