இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1

திருமால் மீது நேசம் கொண்டாயோ?
Updated on
1 min read

வாயும் திரைஉகளும் கானல் மடநாராய்,
ஆயும் அமர்உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்,
நோயும் பயலையும் மீதூர எம்மேபோல்
நீயும் திருமாலால் நெஞ்சம்கோட்பட்டாயே?

அலைகள் திரும்பத் திரும்ப வருகிற கடற்கரைச்சோலையில் உள்ள மடநாரையே, என் தாயும் வானவர்களும்தான் இரவுமுழுக்கத் தூங்குவதில்லை என்று நினைத்தேன்.

ஆனால், அவர்கள் தூங்கினால்கூட, நீ தூங்கமாட்டாய்போல.

என்ன ஆயிற்று? நீயும் எங்களைப்போல் திருமால் மீது நேசம் கொண்டாயோ? அதனால் உன் உடல் இளைத்து நோயும் பசலையும் வந்ததோ? தூக்கம் போனதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com