கோட்பட்ட சிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேண்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்,
ஆள்பட்ட எம்மேபோல் நீயும் அரவுஅணையான்
தாள்பட்ட தண்துழாய்த்தாமம் காமுற்றாயே?
கூரான அலகைக்கொண்ட அன்றில்பறவையே, எதையோ எண்ணிக்கொண்டு நீண்ட நள்ளிரவிலும் படுக்கைக்குச் செல்லாமல் வருந்திக் கொண்டிருக்கிறாயே, என்ன ஆயிற்று?
நீயும் எங்களைப்போல் எம்பெருமான் மீது நேசம் கொண்டாயோ? பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் பெருமானின் திருவடியில் பொருந்திய குளிர்ச்சியான துளசிமாலை
மீது விருப்பம் கொண்டாயோ? அதனால் உன் தூக்கம் போனதோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.