இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5

பலகாலமாக உலகுக்கு வேண்டிய
Updated on
1 min read

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே, நீயும் மதுசூதன்
பாழிமையில்பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே?

பலகாலமாக உலகுக்கு வேண்டிய தண்ணீரைச் சுமந்துகொண்டு மழையாகப் பொழிகிற வானமே, என்ன ஆயிற்று? நீயும் என்னைப்போல், என் தோழியரைப்போல் அந்த மதுசூதன் மீது நேசம்கொண்டாயோ? அவனுடைய வலிமையைக் கண்டு மயங்கினாயோ, அதனால் நைந்து மழையாகப் பொழிகிறாயோ? நீ வாழ்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com