இரண்டாம்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7

பகைவர்களைவிடக் கொடுமை செய்கிறாய்
Updated on
1 min read

தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு, எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர்வகையில் கொடிதாய், எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி, கனை இருளே.

செறிந்த இருளே, எம்பெருமான் நாரணனை எண்ணி நாங்கள் எங்களுடைய மடநெஞ்சத்தை இழந்தோம், ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கிறோம், நீயோ, நடுவில் வந்து எங்களைத் துன்புறுத்துகிறாய், பகைவர்களைவிடக் கொடுமை செய்கிறாய், நெடுங்காலம் இப்படி எங்களுடன் பகையாகவே இருக்கப்போகிறாயா? நீ வாழ்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com