ஏறனை, பூவனை, பூமகள்தன்னை
வேறுஇன்றி விண்தொழத் தன்னுள் வைத்து
மேல்தன்னைமீதிட நிமிர்ந்து மண்கொண்ட
மால்தன்னின் மிக்கும் ஓர்தேவும் உளதே?
எம்பெருமான் காளையை வாகனமாகக்கொண்ட சிவனையும், பூவிலே பிறந்த பிரம்மனையும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளையும் வேறுபாடின்றித் தனக்குள் வைத்துக்கொண்டவன், அவனை விண்ணோர் தொழுது வணங்குகிறார்கள், மேலே மேலே வளர்ந்து, மேலுலகங்களையெல்லாம் தாண்டிச்சென்று உலகை அளந்தான் அவன்,
அத்தகைய திருமாலைவிட உயர்ந்த இன்னொரு தெய்வம் உள்ளதா? (இல்லை.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.