இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5

அழகிய தாமரைபோன்ற கண்களை
Updated on
1 min read

தகும் சீர்த் தன்தனிமுதலின்உள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்கத்
தகும் கோலத் தாமரைக்கண்ணன், எம்மான்
மிகும்சோதி மேல்அறிவார் எவரே?

சிறந்த குணங்களைக்கொண்டவன், தன்னுடைய தனித்துவமான மூலப்பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்ற பொருள்களையும் படைக்கக்கூடிய அழகிய தாமரைபோன்ற கண்களை உடையவன், என்னை அடிமையாகக்கொண்ட எம்பெருமான், மிகுந்த பேரொளி வடிவமானவன், அவனைக்காட்டிலும் மேலான ஓர் இறைவனை அறிந்தவர்கள் எவர்? (எவருமில்லை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com