முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11

வண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற
Updated on
1 min read

குடைந்து வண்டுஉண்ணும் துழாய்முடியானை
அடைந்த தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து
உடைந்து நோய்களை ஒடுவிக்கும்மே.

வண்டுகள் மொய்த்துத் தேனை உண்ணுகிற திருத்துளசிமாலையை அணிந்தவன் எம்பெருமான், அவனைப் பற்றுக்கோடாக அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செறிந்த சொற்களால் தொடுத்தார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், நோய்கள் உடைந்து ஓடிப்போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com