மூன்றாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பாற்கடலிலே யோகத்துயில்
Updated on
1 min read

பயிலும் சுடர்ஒளி மூர்த்தியை,
பங்கயக் கண்ணனை,
பயில இனிய நம் பாற்கடல்
சேர்ந்த பரமனைப்
பயிலும் திருஉடையார் எவரேலும்
அவர் கண்டீர்
பயிலும் பிறப்பு இடைதோறும் எம்மை
ஆளும் பரமரே.

செறிந்த சுடர் ஒளியாகிய மூர்த்தி, தாமரைக்கண்ணன், அனுபவிப்பதற்கு இனிய பரமன், பாற்கடலிலே யோகத்துயில்கொள்ளும் நம் இறைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானைச் சேர்வது பெரும்செல்வம், அந்தச் செல்வத்தை உடையவர்கள் யாரானாலும் சரி, எந்தப்பிறப்பிலும் நான் அவர்களுக்கு அடிமை.

••••

பாடல் - 2

ஆளும் பரமனை, கண்ணனை,
ஆழிப்பிரான்தன்னை,
தோளும் ஓர் நான்கு உடைத் தூமணி
வண்ணன், எம்மான்தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப்
பணியும் அவர் கண்டீர்
நாளும் பிறப்பு இடைதோறும் எம்மை
ஆளுடை நாதரே.

நம்மை ஆளும் பரமன், கண்ணன், சக்ராயுதத்தை ஏந்திய தலைவன், நான்கு திருத்தோள்களைக்கொண்ட தூய மணிவண்ணன், நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானைக் கைகூப்பிப் பணிந்து வணங்குபவர்கள்தான் எல்லாப் பிறப்பிலும் என் தலைவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com