கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரான்அன்றி யாரே
திருத்தித் திண்நிலை மூஉலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?
இந்த மூன்று உலகங்களையும் திருத்தி, திடமாக்கி, தமக்குள் வைத்துக் காக்கும் இயல்புடையவர்கள் யார்?
தன்னுடைய சிந்தனையாலேயே தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கிய மாயப்பிரான், அவனைத் தவிர யாரால் இது முடியும்? (வேறு யாராலும் முடியாது.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.