இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5

ஞானங்களால்கூடப் புரிந்துகொள்ள
Updated on
1 min read

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்,
கனிவார் வீட்டுஇன்பமே, என் கடல்படா அமுதே,
தனியேன் வாழ்முதலே, பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனிஆர் கோட்டில் வைத்தாய், நுனபாதம் சேர்ந்தேனே.

ஞானங்களால்கூடப் புரிந்துகொள்ள இயலாத அரிய தன்மையைக் கொண்டவனே, எங்கள் தந்தையே, எம்பெருமானே, பக்தியால் கனிந்தவர்களுக்கு மோட்சத்தைப் போன்ற சுகம் தருபவனே, உப்புக்கடலிலே உருவாகாத அமுதமே, தனிமையிலுள்ள என்னுடைய வாழ்க்கைக்கு முதற்காரணமானவனே, வராக அவதாரமெடுத்து ஏழு உலகங்களையும் கூரான கொம்பிலே தூக்கியவனே, நான் உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com