இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1

பெருமானை எண்ணி ஆடுகிறாள்
Updated on
1 min read

ஆடிஆடி அகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காஎன்று
வாடிவாடும் இவ் வாள்நுதலே.

(தாய் சொல்கிறார்)

ஒளிநிறைந்த நெற்றியைக்கொண்ட என் மகள், பெருமானை எண்ணி ஆடுகிறாள், உள்ளம் கரைகிறாள், இசையோடு பாடுகிறாள், கண்களில் நீர் பெருகுகிறது, 'நரசிங்கா' என்று அவனை எங்கும் தேடுகிறாள், வாடுகிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com