இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 4

இலங்கையை அழித்தவனே
Updated on
1 min read

'இலங்கை செற்றவனே!' என்னும், பின்னும்
'வலம்கொள் புள் உயர்த்தாய்' என்னும், உள்ளம்
மலங்க வெவ்உயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே.

இந்தப்பெண் 'இலங்கையை அழித்தவனே' என்கிறாள், பிறகு, 'வெற்றியுடைய கருடனைக் கொடியாகக் கொண்டவனே' என்கிறாள், அவனையெண்ணி உள்ளம் கலங்க, நெருப்பைப்போல் பெருமூச்சுவிடுகிறாள், கண்களில் நீர் பெருகக் கலக்கத்தோடு நின்று வணங்குகிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com