என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும் சுடர்மலைக்குக் கண், பாதம், கை கமலம்,
மன்னும் முழு ஏழ்உலகும் வயிற்றின் உள,
தன்னுள் கலவாதது எப்பொருளும்தான் இலையே.
என்னுள்ளே கலந்தவனான பெருமானின் சிவந்த கனிவாய் செந்தாமரை போன்றது, மின்னும் சுடர்மலையாகிய அப்பெருமானின் கண், பாதம், கை அனைத்தும் தாமரைகளே, விளங்கும் ஏழு உலகங்களும் முழுமையாக அவனது திருவயிற்றில் உள்ளன, அவனுக்குள் கலக்காத எப்பொருள்களும் இல்லையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.