இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 10

அவனைக் கண்களால் காண இயலாது
Updated on
1 min read

ஆண்அல்லன், பெண்அல்லன், அல்லா அலியும் அல்லன்,
காணலும்ஆகான், உளன்அல்லன், இல்லைஅல்லன்,
பேணும்கால் பேணும் உருஆகும், அல்லனும்ஆம்,
கோணை பெரிதுஉடைத்து எம்பெருமானைக் கூறுதலே.

எம்பெருமான் ஆண் அல்லன், பெண் அல்லன், இவை இரண்டும் அல்லாத அலியும் அல்லன்.

அவனைக் கண்களால் காண இயலாது, அவன் உள்ளவனும் அல்லன், இல்லாதவனும் அல்லன்.

பக்தர்கள் அவனை விரும்பினால், அவர்கள் விரும்பும் உருவத்தில் தோன்றுவான், அவ்வாறில்லாமல் வேறுவிதமாகவும் அமைவான்.

இத்தகைய பெருமானைப் பற்றி எப்படிப்பேசுவது? இது சிரமமான செயலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com