எஞ்ஞான்றும் நாம் இருந்துஇருந்து இரங்கி, நெஞ்சே,
மெய்ஞ்ஞானம் இன்றி வினைஇயல் பிறப்பு அழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவுஅற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே.
நெஞ்சே, உண்மையான ஞானம் இல்லாமல், நாம் வினையால் ஏற்படும் பிறவிச்சுழலில் அழுந்தி, இங்கேயே பிறந்து, இருந்து, வருந்தி வாடுகிறோம், எப்போதும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற மெய்ஞ்ஞானச் சோதியான கண்ணனை நம்மால் அடைய இயலுமா?
•••
பாடல் - 8
மேவு துன்பவினைகளை விடுத்தும்இலேன்,
ஓவுதல்இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவு தொல்சீர்க் கண்ணா, என் பரம்சுடரே,
கூவுகின்றேன் காண்பான், எங்கு எய்தக் கூவுவனே?
எங்கும் பரந்து விரிந்த, பழைமையான சிறப்பைக்கொண்ட கண்ணனே, என் பரம் சுடரே, துன்பங்களை உண்டாக்கும் வினைகளை நான் விடவில்லை, ஓய்வின்றி உன்னுடைய திருவடிகளை வணங்கவுமில்லை, உன்னைக் காண வேண்டும் என்று விரும்பிக் கூவுகிறேன், உன்னை எங்கே சென்று அடைந்துவிட முடியும் என்று நான் நினைக்கிறேனோ! (எந்தப் பெரிய செயல்களையும் செய்யாமல் உன்னை அடைந்துவிடலாம் என்று நான் அப்பாவித்தனமாக எண்ணுகிறேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.