ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

எழுந்தருளியிருக்கும்
ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8
Updated on
1 min read

பாடல் - 7

பரம்சுடர் உடம்பாய், அழுக்குப் பதித்த உடம்பாய்,
கரந்தும், தோன்றியும், நின்றும், கைதவங்கள் செய்தும்,
                                                                              விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரம்கொள் பாதம்அல்லால் இல்லை யாவர்க்கும்
                                                                              வல்சரணே.

உயர்ந்த, சுடர்வடிவான உடம்பாகவும், அழுக்கான பிற உடம்புகளாகவும் இருப்பவன் அவனே, மறைந்தும், தோன்றியும், நின்றும், வஞ்சனைகள் செய்தும் பலவிதமாக இயங்குகிறவன், விண்ணோர் தலைவணங்குகிற திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அப்பெருமானின் வரம் தரும் திருவடிகளையன்றி, நமக்கெல்லாம் சிறந்த புகலிடம் வேறேதும் இல்லை.

***

பாடல் - 8

வல் சரண் சுரர்க்காய், அசுரர்க்கு வெம்கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என் சரண், என் கண்ணன், என்னை ஆளுடை என் அப்பனே.

தேவர்களுக்கு வலிமையான புகலிடமாக இருப்பவன் அவனே, அசுரர்களுக்கு வெம்மையான எமனாக இருப்பவனும் அவனே, தன்னுடைய திருவடி நிழலிலே உலகங்களை வைக்கிறான், பிழை செய்வோரை அவ்வாறு வைக்காமல் தண்டிக்கிறான், தெற்குத்திசைக்குப் புகலிடமான திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அப்பெருமான்தான் என் புகலிடம், என் கண்ணன், என்னை ஆளும் என் அப்பன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com