

பாடல் - 11
காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே
'உலகத்தவர்களே, பாருங்கள்' என்று கண்முன்னே நிமிர்ந்து உலகை அளந்த திருவடிகளைக்கொண்டவன் எம்பெருமான், அத்தகைய பெருமானைக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவை பெருமானின் ஆணைகளே ஆகும், அவற்றுள் திருவிண்ணகரைப்பற்றிய இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் குற்றமில்லாதபடி விண்ணோர்களால் மதிக்கப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.