ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

புகழைப் பாடுகின்றன
ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் - 11

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்
                                                            தேவபிரானையே
தந்தை, தாய் என்று அடைந்த வண் குருகூரவர்
                                                            சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி
                                                            மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார்
                                                            திருமாலுக்கே.

சிந்தையால், சொல்லால், செய்கையால் எம்பெருமானாகிய தேவபிரானையே தன் தந்தை, தாய் எனப் பெற்றவர், வளம் நிறைந்த திருக்குருகூர்ச் சடகோபன், அவர் பாடிய ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களும் தொலைவில்லிமங்கலத்தின் புகழைப் பாடுகின்றன. இந்தச் செந்தமிழ்ப்பாடல்களைப் பாட வல்லவர்கள், திருமாலுக்கு அடிமைசெய்வர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com