ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

பக்தர்களைக் காக்கும்
Published on

பாடல் - 11

நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடிமேல்
சேமம்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம்கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.

ஆயிரம் திருநாமங்களைக்கொண்ட நம்பெருமானின் திருவடிகளையே காப்பாகப் பற்றியவர் தென்குருகூர்ச் சடகோபன், அவர் ஆராய்ந்து உரைத்த ஆயிரம் திருப்பாடல்களும் அப்பெருமானின் ஆயிரம் திருநாமங்களைப்போன்றவை, அவற்றுள், பக்தர்களைக் காக்கும் திருவல்லவாழ் என்னும் திருநகரத்தின்மீது அமைந்த இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் சொல்கிறவர்கள் இந்தப்  பிறப்பிலேயே சிறந்தவர்களாவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com