பாடல் - 11
மின்கொள்சேர் புரிநூல் குறளாய் அகல்ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர் மின் இடையவர்க்கே.
ஒளியுடைய முப்புரிநூலை அணிந்த வாமனனாக வந்து, அகன்ற உலகத்தைத் தானமாகப் பெற்றவன், வலிமையான கள்ளன், அப்பெருமானின் திருவடிகளை வணங்கிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களை இசையோடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து இனிமையான பாடல்களும் திருவண்வண்டூரைப்பற்றியவை. இவற்றைச் சொல்லவல்லவர்கள், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுக்கு மன்மதன்போல் ஆவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.