ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11

மணம் நிறைந்த
ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் - 11

இரைக்கும் கரும்கடல்வண்ணன் கண்ணபிரான்தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊரெல்லாம்.

சத்தமிடும் கரிய கடலின் வண்ணத்தைக்கொண்டவர் கண்ணபிரான், அவரைப் பற்றி, மணம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன் முறையாக அமைந்த ஆயிரம் அந்தாதிப் பாடல்களை எழுதினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்லவல்லவர்களுக்கு, தாங்கள் இருக்கும் ஊரே வைகுந்தம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com