

பாடல் - 11
உறங்குவான்போல் யோகுசெய்த பெருமானைச்
சிறந்த பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்துபோய் வைகுந்தம் சேரா ஆறு எங்ஙனேயோ?
பாற்கடலிலே உறங்குவதுபோல யோகத்துயில் கொள்கிறவன் எம்பெருமான், அப்பெருமானைப் பற்றி, சிறந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் பண் நிறைந்த அந்தாதிப் பாடல்கள் ஆயிரம் பாடினார், அவற்றுள் இந்தப் பத்தையும் யார் பாடுகிறார்களோ, அவர்களுடைய பூமி வாழ்க்கை முடியும்போது, அவர்கள் வைகுந்தம் சென்று சேராமலிருப்பார்களா? (நிச்சயம் அவர்கள் பரமபதத்தைச் சேர்வார்கள்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.