எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

மூன்று உலகங்கள்
எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read


பாடல் 11

நல்ல கோட்பாட்டு உலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர், மக்களே.

இறைவனின் அடியவர்களுக்குத் தொண்டுசெய்யவேண்டும் என்கிற நல்ல கொள்கையைக்கொண்டவை மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களுக்குள்ளும் நிறைந்த எம்பெருமான், தாமரைக் கண்ணனை அழகிய, குளிர்ந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்கள் மனைவிமார்கள், குழந்தைகளுடன் சிறந்த குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com