

பாடல் - 6
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்று, அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்,
நமர்களோ, சொல்லக் கேண்மின், நாமும் போய் நணுகவேண்டும்,
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே.
அமரர்கள் என்று சொல்லப்படுகிற எல்லாருக்கும் முதன்மையானவர், முருகனுடைய தந்தையாகிய சிவனின் துன்பத்தைத் துடைத்த கோவிந்தனார், எம்பெருமான், அத்தகைய பெருமான், திருவனந்தபுரத்திலே அருள்புரிகிறார், அங்கே அவருக்கு அர்ச்சனை செய்பவர், அமரர்களின் தலைவரான சேனைமுதலியார், எம்பெருமானுக்கு நெருங்கிய தொண்டுகளைப் புரிகிறவர்கள், விண்ணோர்கள். நம்மவர்களே, சொல்வதைக் கேளுங்கள், நாமும் அந்தத் திருவனந்தபுரத்துக்குச் செல்லவேண்டும், எம்பெருமானுக்குத் தொண்டுபுரியவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.