பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 8

காளையாகிய எம்பெருமான்
பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 8
Updated on
1 min read


பாடல் - 8

கடுவினை களையல் ஆகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர், எழில் அணி அனந்தபுரம்,
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர், நாம் நமக்கு அறியச் சொன்னோம்.

நம்மவர்களே, மன்மதனைப் பெற்ற காளையாகிய எம்பெருமான் விரும்பி அருள்புரியும் திருத்தலம், அழகிய திருவனந்தபுரம், அங்கே படமுடைய பாம்பாகிய ஆதிசேஷன்மீது பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளைக் காண நடந்துவாருங்கள், அத்திருப்பாதங்களைக் கண்டு வணங்கினால், கொடிய வினைகளையெல்லாம் களைந்துவிடலாம், இதை நீங்கள் அறியும்படி நான் சொல்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com