

பாடல் - 9
நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியஆன,
சேமம் நன்கு உடைத்து, கண்டீர், செறிபொழில் அனந்தபுரம்,
தூமம் நல் விரை மலர்கள் துவள்அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே.
நீங்கள் அறியும்படி நாங்கள் சொன்ன நாட்கள் நெருங்கிவிட்டன. செறிந்த பொழில்களைக்கொண்ட திருவனந்தபுரம்தான் உங்களுக்கு நன்மை தரும், அதனை அறியுங்கள். பூஜைக்கேற்ற தூபம், நல்ல, வாசனை மிகுந்த மலர்கள் போன்றவற்றைக் குற்றமில்லாதபடி ஆராய்ந்து எடுத்துக்கொண்டு அங்கே செல்லுங்கள், வாமனனான எம்பெருமானின் திருவடிகளில் அவற்றைச் சமர்ப்பித்துப் போற்றுங்கள், உங்களுடைய வினைகள் தாமே தொலைந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.