

பாடல் 4
தலைமேல் புனைந்தேன் சரணங்கள், ஆலின்
இலைமேல் துயின்றான், இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலைபேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே.
எம்பெருமானின் திருவடிகளை நான் என்னுடைய தலைக்குமேல் சூடிக்கொண்டேன், ஆலிலையிலே துயின்றவன், தேவர்களெல்லாம் வணங்கும்படி திருமலையிலே நின்று, என் மனத்திலும் இருக்கும் எம்பெருமானை யாராலும் என்னிடமிருந்து பிரிக்க இயலாது என்று நான் உறுதியோடு இருக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.