

பாடல் 5
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை,
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்,
மெச்சப்படான் பிறர்க்கு, மெய்போலும் பொய்வல்லன்,
நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே.
எம்பெருமான் என் நெஞ்சைவிட்டு நீங்கமாட்டான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். கையிலே சக்ராயுதத்தை ஏந்திய அண்ணலாகிய எம்பெருமான் என்ன செய்வாரோ, யார் அறிவார்கள்? எம்பெருமானை வணங்காதவர்களுக்கு அவர் பொய்போன்றவர், அவர்கள் அவரைப் புகழமாட்டார்கள், ஆனால், விரும்பி வணங்கும் நமக்கோ, அவர் உண்மையானவர், ஆதிசேஷனாகிய நாகத்தைப் படுக்கையாகக்கொண்டு திருக்காட்சி தருவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.