

பாடல் 6
நாகத்து அணையானை, நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை,
மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே.
ஆதிசேஷனாகிய நாகத்தைப் படுக்கையாகக் கொண்டவர் எம்பெருமான், அவரைத் தினந்தோறும் ஞானத்தால் உள்ளத்தில் வைத்து அனுபவிப்பவர்களுக்கு அருள்செய்கிற அம்மான், வானத்திலுள்ள பிறைச்சந்திரனைத் தன்னுடைய திருச்சடையிலே வைத்திருக்கும் சிவபெருமானைத் தன் திருமேனியின் ஒரு பகுதியாகக் கொண்டவர், அவருடைய திருவடிகளை நான் வணங்குகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.