பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 6

நான் வணங்குகிறேன்
பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 6
Updated on
1 min read


பாடல் 6

நாகத்து அணையானை, நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை,
மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே.

ஆதிசேஷனாகிய நாகத்தைப் படுக்கையாகக் கொண்டவர் எம்பெருமான், அவரைத் தினந்தோறும் ஞானத்தால் உள்ளத்தில் வைத்து அனுபவிப்பவர்களுக்கு அருள்செய்கிற அம்மான், வானத்திலுள்ள பிறைச்சந்திரனைத் தன்னுடைய திருச்சடையிலே வைத்திருக்கும் சிவபெருமானைத் தன் திருமேனியின் ஒரு பகுதியாகக் கொண்டவர், அவருடைய திருவடிகளை நான் வணங்குகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com