

பாடல் 8
ஆழியான், ஆழி அமரர்க்கும் அப்பாலான்,
ஊழியான், ஊழி படைத்தான், நிரை மேய்த்தான்,
பாழிஅம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்,
வாழி என் நெஞ்சே, மறவாது வாழ்கண்டாய்.
என் நெஞ்சே, நீ வாழ்க, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய பெருமான், பெருமிதத்தையுடைய அமரர்களைத் தாண்டி உயர்வானவன், ஊழிக்காலத்திலும் உள்ளவன், அந்த ஊழிக்காலத்தில் அழிக்கப்பட்ட பொருட்களையெல்லாம் படைத்தவன், பசுக்கூட்டங்களை மேய்த்தவன், வலிமை மிகுந்த, அழகிய தோளாலே கோவர்த்தன மலையை எடுத்தவன், அத்தகைய பெருமானின் பாதங்களை மறக்காமல் வாழ்வாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.