

பாடல் 9
கண்டேன் கமல மலர்ப் பாதம், காண்டதுமே
விண்டே ஒழிந்த வினை ஆயின எல்லாம்,
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக,
பண்டே பரமன் பணித்த பணிவகையே.
எம்பெருமானின் தாமரைத் திருவடிகளைக் கண்டேன், அவ்வாறு கண்டதும் என்னுடைய வினைகள் அனைத்தும் விண்டுபோயின, முன்பு அந்தப் பரமன் எனக்கு வகுத்த முறைப்படி அவருக்கு என்றும் தொண்டுசெய்தேன், அவரைத் தொழுது அவருடைய வழியில் நடந்தேன், (அதனால் அவருடைய திருவடிகளைக் கண்டேன்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.