

பாடல் 11
பற்று என்று பற்றிப் பரம பரம்பரனை,
மல் திண் தோள் மாலை, வழுதி வளநாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்று ஆகும் கண்ணன் கழல் இணையே.
உயர்ந்தவற்றுள் மிக உயர்ந்த பரம்பொருளாகிய எம்பெருமானை, மிடுக்கான, திண்மையான திருத்தோள்களையுடைய திருமாலைப் பற்றாகப் பற்றினார் வழுதி வளநாடன், எம்பெருமானைப் போற்றி ஓர் ஆயிரம் அந்தாதிப் பாடல்களைச் சொல் மாலையாகத் தொடுத்தார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் கற்றவர்களுக்கு அந்தக் கண்ணனின் கழலணிந்த திருவடிகளே பற்றுக்கோடாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.