ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

இவர்கள் புனிதமானவர்கள்
Updated on
1 min read


பாடல் - 11

தீர்த்தனுக்கு அற்றபின் மற்று ஓர்
சரண் இல்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனன் ஆகிச்
செழும் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து
நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே.

இறைவனுக்கே அடிமை என்று தன்னைத் தந்தபிறகு, வேறு சரண் ஏதும் இல்லை என்று எண்ணுகிறவர் செழுமையான குருகூரைச் சேர்ந்த சடகோபன், அந்த இறைவனையே மனத்தில் எண்ணி ஆயிரம் பாடல்களை அவர் சொல்லியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்களைத் தேவர்கள் எப்போதும் பாராட்டுவார்கள், தங்கள் மனைவியரிடம் ‘இவர்கள் புனிதமானவர்கள்’ என்று உரைப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com