ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8

இரத்த வெள்ளம்
ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8
Updated on
1 min read


பாடல் - 7

மாறு நிரைத்து இரைக்கும் சரங்களின்
நூறு பிணம் மலைபோல் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.

எம்பெருமான், நம் அப்பன், இலங்கையைப் பொடிப்பொடியாக்கும்படி வென்றான், அதற்காக அவன் நான்கு திசைகளிலும் வரிசையாக அம்புகளைச் செலுத்த, அதனால் பெரிய ஓசை எழுந்தது, அசுரர்களின் நூற்றுக்கணக்கான பிணங்கள் மலைபோல் புரண்டு விழுந்தன, கடலில் சேர்ந்த இரத்த வெள்ளம் ஆறுகளில் பாய்ந்தது. இப்படி அற்புதமானமுறையில் இலங்கையை வென்றான் பெருமான்.

***

பாடல் - 8

நேர் சரிந்தான் கொடிக்கோழி கொண்டான், பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன், பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி, கண்டீர், அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே.

எம்பெருமான், நம் அப்பன், தன்னெதிரே வந்து மோதித் தோற்றவனான வாணனுடைய வலிமையான தோள்களை அழித்தான், அப்போது, கோழிக்கொடியைக் கொண்ட முருகனும் பெருமானோடு மோதித் தோற்றான், பின்னர், எரிகின்ற அக்கினிக்கடவுளும் பெருமானோடு மோதித் தோற்றான், மூன்று கண்களையுடைய மூர்த்தியாகிய சிவபெருமானும் பெருமானோடு மோதித் தோற்றான், அதைக் காணுங்கள்/ அறிந்துகொள்ளுங்கள். இப்படி அற்புதமானமுறையில் வாணனை வென்றான் பெருமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com