ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11

உடலைக் கிழித்து மகிழ்ந்த
ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read


பாடல்- 11

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரிசெய்வர் ஏழையரே.

சிறந்த சிங்க வடிவம் எடுத்துப் புகுந்து இரணியனின் உடலைக் கிழித்து மகிழ்ந்த
நரசிம்மப்பெருமான், சக்ராயுதத்தை ஏந்திய செல்வன், அப்பெருமானைக் குருகூர்ச் சடகோபன் மேம்பட்ட ஆயிரம் திருப்பாடல்களிலே பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்களைப் பெண்கள் ஒன்றாகக் கூடிப் பல்லாண்டு இசைத்துக் கவரி வீசி வாழ்த்துவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com