ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 4 

நமக்குப் புகலிடமாகும்
ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 4 
Updated on
1 min read


பாடல் - 4

மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை,
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்,
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே.

வானை முட்டும் மதிள் சுவர்களால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தை விரும்பி அங்கே எழுந்தருளியிருக்கிறார் எம்பெருமான், அவருடைய திருப்பாதங்கள் நமக்குப் புகலிடமாகும், ஆகவே, மானைப்போன்ற கண்களையுடைய இளம் நப்பின்னையின் கணவர், தேன்போன்ற இனிய பெருமான், அவரை வாடாத மலர்கள் இட்டு இறைஞ்சுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com