

பாடல் - 7
மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்,
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்,
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே.
தன்னை விரும்பித் தொழுகிற எல்லாருக்கும் உண்மையாகக் காட்சி தருபவன்; வெறுமனே புறத்தோற்றங்களால்மட்டுமே தொழுகிறவர்களுக்குப் பொய்யாகிறவன், தன்னைக் காண்பிக்காமலிருப்பவன். வயலிலே வாளை மீன்கள் துள்ளுகின்ற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் நம் தலைவனை மனத்தில் நினைத்தால் போதும், அவன் எப்போதும் நம் பக்கத்திலேயே இருப்பான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.