

பாடல் 4
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்திச்
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடரப்
படர்கொள் பாம்பு அணைப் பள்ளிகொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும், தொண்டீர், வம்மினே.
தேவர்களும் முனிவர்களும் சுடர்வடிவமான சோதிப்பெருமானாகிய எம்பெருமானைப் போற்றி, ‘எங்களுடைய இடர்கள் கெடுமாறு இங்கே வந்து காப்பாய்’ என்று வணங்குகிறார்கள், அத்தகைய பெருமான், பரவுகின்ற பாம்பாகிய ஆதிசேஷன்மீது திருத்துயில் கொள்கிறவன், அவன் எழுந்தருளியிருக்கும் திருமோகூருக்குச் செல்வோம், அவனுடைய திருவடிகளை வணங்கி நம் இடர்களைப் போக்கிக்கொள்வோம், தொண்டர்களே, வாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.