

பாடல் 9
மணித் தடத்து அடி, மலர்க் கண்கள், பவளச் செவ்வாய்,
அணிக்கொள் நால் தடம் தோள் தெய்வம், அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து, நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே.
அழகிய தடாகத்தைப்போன்ற திருவடிகள், மலர்போன்ற திருக்கண்கள், பவளம்போல் சிவந்த திருவாய், அழகிய நான்கு பெரிய திருத்தோள்களைக்கொண்ட தெய்வம், அசுரர்களை என்றென்றும் வெல்லும் வலிமையுள்ள சிறப்பானவர், அவர் எழுந்தருளியிருக்கிற, பொழில்கள் நிறைந்த திருமோகூர் அருகே வந்துவிட்டது, நமக்கு நல்ல காப்பான அப்பெருமானை நாம் அடைந்துவிட்டோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.