பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 9

மலர்போன்ற திருக்கண்கள்
பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 9
Updated on
1 min read


பாடல் 9

மணித் தடத்து அடி, மலர்க் கண்கள், பவளச் செவ்வாய்,
அணிக்கொள் நால் தடம் தோள் தெய்வம், அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து, நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே.

அழகிய தடாகத்தைப்போன்ற திருவடிகள், மலர்போன்ற திருக்கண்கள், பவளம்போல் சிவந்த திருவாய், அழகிய நான்கு பெரிய திருத்தோள்களைக்கொண்ட தெய்வம், அசுரர்களை என்றென்றும் வெல்லும் வலிமையுள்ள சிறப்பானவர், அவர் எழுந்தருளியிருக்கிற, பொழில்கள் நிறைந்த திருமோகூர் அருகே வந்துவிட்டது, நமக்கு நல்ல காப்பான அப்பெருமானை நாம் அடைந்துவிட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com